வாழ்க்கை என்னும் காவியம் 555
வாழ்க்கை...
நீச்சல்
தெரிந்த பிறகே...
குளத்தில்
இறங்க நினைப்பது
முடியாத ஒன்றுதான்...
நம் வாழ்வில் துன்பங்கள்
இல்லாத வாழ்க்கை...
வாழநினைப்பதும்
முடியாத ஒன்றுதான்...
குளத்தில் இறங்கினால்தான்
நீ
நீச்சல் கற்றுக்கொள்ள முடியும்...
இன்பமும் துன்பமும்
நீ சந்தித்தால்தான்...
உன் வாழ்வில் நீ சிகரம்
தொட முடியும்...
கண்ணாடியில் ரசம் பூசினால்
மட்டுமே உன் முகம் தெரியும்...
பலதடைகளை நீ தாண்டி
சென்றால் மட்டுமே...
உன் வாழ்வில் நீ
புதுகாவியம் எழுத முடியும்.....