வறுமையா வக்கிரமா

சூரியன் வெளிச்சத்திற்கு
மூலமாவதுபோல்
செல்வம் வாழ்வதற்கு
மூலமாகும்

இருளுக்கு மூலமில்லை
அதுபோல , செல்வம்
இல்லாதவருக்கு
இப்புவியில் வாழ்வுமில்லை

பெற்ற அன்னைக்கு
பிள்ளைகள் நால்வருண்டு
இருந்தும் ஒன்றுபோல
ஒருவரும் உதவாமல்

செத்த பிணம்போல
சமூகத்துக்கும் அஞ்சாம
வீதியில விட்டது
வறுமையா ? வக்கிரமா ?

எழுதியவர் : கோ. கணபதி. (6-Oct-19, 6:42 am)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 44

மேலே