வறுமையா வக்கிரமா
சூரியன் வெளிச்சத்திற்கு
மூலமாவதுபோல்
செல்வம் வாழ்வதற்கு
மூலமாகும்
இருளுக்கு மூலமில்லை
அதுபோல , செல்வம்
இல்லாதவருக்கு
இப்புவியில் வாழ்வுமில்லை
பெற்ற அன்னைக்கு
பிள்ளைகள் நால்வருண்டு
இருந்தும் ஒன்றுபோல
ஒருவரும் உதவாமல்
செத்த பிணம்போல
சமூகத்துக்கும் அஞ்சாம
வீதியில விட்டது
வறுமையா ? வக்கிரமா ?