இயற்கை

ஆஹா என்ன அழகு
என்ன அழகு இந்த
தங்க நிறம் கொண்ட
நெற்கதிர்கள் .... காலை
வெய்யோன் கதிர்பட்டு
தங்கமயமாய் மின்னுகின்றனவே
அறுவடைக்கு காத்திருக்கும் தங்க
நெற்கதிர்கள்...இதனாலோ இந்த
நெல் வயல்கள் தங்கவயல் என்றானதோ
வயல்கொண்ட சிற்றூரும்
பொன்விளைந்த களத்தூர் ஆனதோ
வயிறார உன்ன உணவளிக்கும் நெல்
நெல்லிருக்க தங்கம் எதற்கு
வாழ்வளிக்கும் நெல்லே இந்நெல்லே
தங்கம் எமக்கு என்றனர்
இவ்வூர் மக்களும்
நெல்லை தங்கத்திற்கு நிகராக்கி !

எழுதியவர் : வாசவன் -தமிழ்பித்தன் -வாசு (7-Oct-19, 8:14 pm)
Tanglish : iyarkai
பார்வை : 353

மேலே