கருணை காட்டு

அணைத்துவிட் டாயோ அமேசான் வனத்தீ
சுணங்காம லோடியிசைத் தூறி ! - இணையில்லா
மாதவனே ! மெய்சிலிர்க்க வைக்கும் சிவந்தவுன்
பாதத்தை நக்கும் பசு.

குழலூதி யெம்முள்ளம் கொள்ளைகொண்டு விட்டாய்
மழைபோலன் பைப்பொழிய வாராய் - அழகாய்
இடைவளைத் தாடும் இடையர் குலத்தோய் !
கடைக்கண்ணா லுன்கருணை காட்டு.

ஓவியம் - கேசவ்ஜி

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (11-Oct-19, 11:44 pm)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 42

மேலே