அழகியே அழகியே

எல்லாம் உன்னிடம்
எல்லை மீறிக் கிடக்கிறது
கைப் பிடிக்குள் அகப்படாமல்
வழுகிச் செல்லும்
விலாங்கு மீன் போல
வார்த்தை வரவைக்குள்
கட்டி வைக்க முடியாமல்
வரம்பு மீறிச் செல்கிறது
உன் அழகு
என் கவிதை வயல்
வரண்டு சிதிலமாகிக்
கிடக்குதடி உன்னாலே


அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (14-Oct-19, 12:52 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
Tanglish : azhakiye azhakiye
பார்வை : 188

மேலே