அவள் பார்வை
அட்சரங்களுக்குள் பூட்டி வைக்கப்பட்ட
மந்திரங்கள் நிறைவான உச்சரணையால்
உயிர்கொண்டெழுவதுபோல் ,
பெண்ணே உன் கண்களில் நீ பூட்டிவைத்த
ஜாலமெல்லாம் நீ கண் திறந்து என்னை
பார்க்கும்போது காதல் அஸ்திரங்களாய்
என் மனதை துளைக்க காதல் மந்திர ஒலியாய்
மாறி என் காதில் ரீங்காரம் செய்கிறதே
உன் பார்வை மந்திர பார்வையடி கண்ணே.