நிலையாக பயிர்ச்செய்ய

இனி காலம் எல்லாம்
இயல்பானதாய் இருக்குமோ
இயற்கையின் மேலே யாருக்கும்
அக்கறையே இல்லை

துளி நீரை நாமும்
பெற வேண்டும் என்றால்
வளிமண்டலம் அதற்கு
வலிமைப் பெற வேண்டும்

மரமும் காடும்
மப்பைத் தடுக்கும் மலையும்
மகத்துவ மழையால் ஆன
மாசற்ற ஆறும் வேண்டும்

ஆதவனின் அனலும்
அதற்கு துணை வேண்டும்
அடுக்கடுக்கான இச்செயலே
அகிலம் செழிக்க உதவும்

நிலமும் நீர்வளமும்
நிலைத்திருக்க வேண்டும்
நிலையாக பயிர்ச்செய்ய
விவசாயி வேண்டும்

நவீனத்திற்காக இதனை
நாசம் செய்ய துணிந்தால்
நாக நஞ்சுப்பெற்ற உடல் போல் - இந்த
நல்லுலகம் விரைந்து அழியும்.
---- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (14-Oct-19, 7:05 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 49

மேலே