கழுமரத்தில் ஏற்றிய
வாழுகின்ற வாழ்வில்
கிடைப்பதெல்லாம் வரமே
பெறுகின்ற யாவும்
குறைத் தீர்க்கும் மருந்தே
அளவோடு பெற்றால்
அதில் எல்லாம் நலமே
அளவதில் மாறின்
பெருந்துன்பம் வருமே
இருப்பதை வைத்து
எதைச் செய்ய முனையின்
சிறப்பான முடிவால் - நம்மை
சிகரத்தில் சேர்க்கும்
பம்மாத்துக்காக
பல வேலை செய்தால்
பாவங்கள் பெற்று
பாதாளம் செல்ல நேரும்
கணக்கின்றி கடன்களை
காணுவோரிடம் பெற்றால்
கழுமரத்தில் ஏற்றிய
சமண முனிவராய் மாறுவோம்.
---- நன்னாடன்.