அரும்பும் காதல்

அழகிய கிராமம் ஒன்றில்
மிகப் பெரிய வீடு
சுற்றிலும் சோலை
என்னே/ இயற்கை எழில்
மேகங்கள் கூடும் போதுவீசும் காற்று
எவ்வளவு சுகம் இனிய உணர்வு
அங்கே அன்பான குடும்பம்
அதற்கு அடுத்து மாடி வீடு ஓன்று
பகலோ இரவோ மாடியில்
பிள்ளைகள் படிப்பது விளையாடுவது
என்னேரமும் கலகப்புக்கு பஞ்சமில்லை
அந்த வீட்டில் புதிதாக இளைஞன்
இனி சுவாரஸ்யம்தான்
இங்கே இந்த அழகிய வீட்டில்
துருதுருவென வளர்ந்து நிற்கும்
அழகிய கன்னிப் பெண்
இதுநாள் வரைக்கும் அவள்
அந்த வீட்டில் இருந்தது எவருக்கும் தெரியவில்லை
ஆனால் இப்போ அவ்வீட்டு யன்னலில் அவள் உருவம்
தெரிகிறது சந்தோசம் தான் ஏன் / இன்னுமா
புரியவில்லை இந்த புரியாத புதிர் ..........

எழுதியவர் : பாத்திமாமலர் (16-Oct-19, 11:25 am)
Tanglish : arumbum kaadhal
பார்வை : 106

மேலே