மழையும் மழலையும்

முத்துமுத்தாய் சிரிக்கு
அள்ளி குவிக்கப் போறோம்!
கொத்துக்கொத்தாய் விழுது
கூடை நிறைக்கப் போறோம்!
கொட்டித் தீர்க்கப் போகுது
சேர்த்து வைக்கப் போறோம்!
குளிர வைக்க வருது
இனிமை காணப் போறோம்!
குடையை எடுத்து வீசி
குதித்து ஆடப் போறோம்...!

வேல் முனியசாமி...

எழுதியவர் : வேல் முனியசாமி (16-Oct-19, 4:57 pm)
சேர்த்தது : வேல் முனியசாமி
பார்வை : 197

மேலே