ஞானமாய்

நீ சேலையில் சுமக்கும்
புத்தன்

புத்தனாகவே இருக்கின்றான் ஞானம்
பெற்றவனல்லவா

நானும் நானாகவே இருக்கப்
பார்க்கிறேன்

எனக்கு புத்தனாக வேண்டாம்
சித்தனாக வேண்டாம்

நான் நானாக இருக்க
புத்தன் பெற்ற

ஞானமாய் எனக்கு நீ மட்டும் போதும்

எழுதியவர் : நா.சேகர் (18-Oct-19, 8:37 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 66

மேலே