வேண்டாமே
இரு விழியாள் தன் இரு விழியால்
கொல்லாது கொல்லும் அம்பெய்தி
சொல்லாது கொள்ளாது சென்றுவிட
குற்றுயிராய் நான் இருவிழியாள்
தந்தபரிசு
இருவிழியால் என்நிலை இந்நிலை
என்றால்
மூன்றாவது ஒரு விழியா தாங்குமா
இவ்வுலகம்
முக்கண்ணன் ஒருவன் போதுமே
முக்கண்ணி என்றும் வேண்டாமே