காதல்

கிடைக்கும் வரை ஊனை உருக்கும்
கிடைத்த பின்னால் ஊனை பெருக்கும்
உடலோடு ஒட்டி உறவாடி நிற்கும்
மீண்டும் வந்து வந்து துன்புறுத்தும்
உடலை ஊடுருவி உயிரோடு சேர்ந்து
உறவாடும் உணர்வு ஒன்று உண்டெனில்
அதுவே உயர்க்காதல் அறி

எழுதியவர் : வாசவன் -தமிழ்பித்தன் -வாசு (18-Oct-19, 5:10 pm)
Tanglish : kaadhal
பார்வை : 224

மேலே