ரகசியம்

எதையோ எழுதிவைப்போம்
என்று எழுததொடங்கியதும்

என் பேனா முனை உன்னை
முத்தமிட தயாராகிவிடுகிறது

என் எழுத்தில் எப்பொழுதும்
நானில்லை ஆனால்

நீ மட்டும் இல்லாமல் இருந்ததே
இல்லை

இது நான் மட்டும்
அறிந்த ரகசியம் என்றிருந்தேன்

இல்லை எனக்கும் தெரியும்
என்று என் பேனா சொன்னது

இப்பொழுது உங்களுக்கும்

எழுதியவர் : நா.சேகர் (20-Oct-19, 10:25 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : ragasiyam
பார்வை : 173

மேலே