எட்டாக்கனி

ஏழைக்குப் பட்டதாரி
ஆசை என்பதும்/
எளியகுலப் பிறவிக்கு
அரசியல் என்பதும்/

பயந்தவனுக்கு மாவீரன்
பட்டத்து நினைவும்/
யுத்தபூமியில் பிறந்தவனுக்கு
அமைதியான சூழலும்/

விவசாயிக்கு வறுமைக்கோடு
நீக்கம் அறிவிப்பும்/
கண்ணிலந்தவனுக்கு ஓவியம்
வரையும் ஆவலும்/

கிணற்றுத்தவளை கடலுக்கு
ஏங்குவது போல் /
என்றென்றும் நிறைவேறாத
ஆசைகள் எட்டாக்கனியாக/

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (21-Oct-19, 8:01 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 107

மேலே