எட்டாக்கனி
ஏழைக்குப் பட்டதாரி
ஆசை என்பதும்/
எளியகுலப் பிறவிக்கு
அரசியல் என்பதும்/
பயந்தவனுக்கு மாவீரன்
பட்டத்து நினைவும்/
யுத்தபூமியில் பிறந்தவனுக்கு
அமைதியான சூழலும்/
விவசாயிக்கு வறுமைக்கோடு
நீக்கம் அறிவிப்பும்/
கண்ணிலந்தவனுக்கு ஓவியம்
வரையும் ஆவலும்/
கிணற்றுத்தவளை கடலுக்கு
ஏங்குவது போல் /
என்றென்றும் நிறைவேறாத
ஆசைகள் எட்டாக்கனியாக/