காதலே காதல்
அழியாது காவியத்தில் அடங்காது
மறையாது உள்ளத்தில் ஒழியாது
தூங்காது எண்ணத்தில் தாங்காது
வாங்காது வைத்த கண்ணும் மூடாது
சேராது பிறர் சிரித்தாலும் தேறாது
வருந்தாது மனசுக்குள்ளே நசுங்காது
சொல்லாது அறிவுரையும் ஏற்காது
மிரளாது பயமில்லை திருந்தாது
கலங்காது சொந்தபந்தம் நினைக்காது
மயங்காது எதைக்கண்டும் தயங்காது
அது என்ன /காதலே காதல்