மிருதுளாவின் மழலை

யாழினிது... குழலினிது...
அதனினும் இனிது
மிருதுளாவின் மழலை...
அதனைக் கேட்கும் ஆச்சிக்கு
ஏதுமில்லை கவலை...

உலகைக் கட்டிப்போடப் போகும்
குரல் விருட்சத்தின் விதை
இங்கு முளைத்து எழுகிறது...

கணீர் பேச்சில் உலகக்
கவனம் ஈர்க்க
தமிழ்த்தாய் வாழ்த்தில்
ஒத்திகை ஒன்று
ஆச்சியின் பயிற்சியில்
அரங்கேறுகிறது...

புயலோடு போட்டிபோட
தென்றலோடு நட்பு பாராட்ட
நற்றமிழ் ஒன்று
நடை பயில்கிறது இன்று...

மொத்தத்தில்...
இன்பத்தேன் வந்து
பாயுது காதினிலே...
மிருதுளாவின்
மழலைத் தமிழினிலே...
😃👍💐

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (23-Oct-19, 11:48 am)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 134

மேலே