இதயத்தை திறப்போம்

நம் வாய் ஓயாமல் பேசிக்கொண்டே இருக்க
நல்லதும் கெட்டதும் பேச்சின் தரத்திற்கேற்ப்ப
நம்மை அறியாமலேயே நம்மை சேர
நாம் நம் இதயத்தை மட்டும் ஏன் பூட்டி வைக்கின்றோம்
இதயம் காதலின் மலர்ப்பீடம் - இதயத்தை திறப்போம்
காதல் சந்நிதானத்தை நாடி , வாயை சற்றே மூடி
கண்களையும் மூடி ........
நம் மனக்கண்முன் இதயத்தில் வீற்றிருக்கும்
காதல்/அன்பு தெய்வம் காட்சி தரும் நமக்கு
அமைதி தந்து மனப்பக்குவம் தந்து காதல் சேர்த்து
'இதயம்' உள்ளவராய் வாழ்வோமே நாம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (28-Oct-19, 7:29 am)
பார்வை : 123

மேலே