மயங்குது மனது உன்னாலே
வரிகளில் அசைய மறுக்கிறது சிற்றிடை
தழைகளில் மலர மறுக்கிறது பூவிதழ்
பந்திகளில் வந்து குந்தாமல்
ஓடியும் நீந்தியும் என்னை
அலைக்களிக்கும் உன் விழிகள்
உன் முன்பால் மயங்கிக்
கிடக்கிறது என் வெண்பா
கிடக்கிறது என் வெண்பா
அடங்காப் பிடாரியாய்
வரிகளுக்குள் வந்து விழாமல்
என் கவிதையைச் சிதைக்கும்
உன் சுந்தர வதனம்
கண்ட நாள் முதல்
எதற்கும் அடங்காமல்
நீ தான் வேண்டுமென்று
அடம்பிடித்துக் கிடக்கும் என்னிதயம்
சொல்ல முடியாமல்
தவிக்கிறேன் நான்
வரிகளுக்குள் வந்து விழாமல்
என் கவிதையைச் சிதைக்கும்
உன் சுந்தர வதனம்
கண்ட நாள் முதல்
எதற்கும் அடங்காமல்
நீ தான் வேண்டுமென்று
அடம்பிடித்துக் கிடக்கும் என்னிதயம்
சொல்ல முடியாமல்
தவிக்கிறேன் நான்
அஷ்றப் அலி