கழுதைக்கும் கழுதைக்கும் கல்யாணம் - ஓய்வின் நகைச்சுவை 243

கழுதைக்கும் கழுதைக்கும் கல்யாணம்
ஓய்வின் நகைச்சுவை: 243

மனைவி: ஏன்னா! கழுதைக்கும் கழுதைக்கும் கல்யாணம் பண்ணி வச்சா உண்மையிலே மழை வருமான்னா!

கணவன்: அது அவா அவா நம்பிக்கைடி! நாமே என்ன சொல்றது!! ஆனால் ஒன்னு நம்ம கல்யாணத்தப்போ சாயங்காலம் நன்னா மழை பெஞ்சது. உங்க கிராமத்திலிருந்து வந்த எல்லோரும் மாமா கையை குலுக்கிண்டு குறும்பா சிரிச்சிண்டு போனதுதான் ஞாபகம் வர்றது.

மனைவி: நல்ல வேளை ஞாபகப்படுத்தினீங்க! கோபம் வந்தால் இனி கிட்டத்தே வரக்கூடாதும்மா இந்த வயசில் உதைச்சா யார் தாங்குறது?

கணவன்: அடிப்போடி! இரண்டு கழுத வயசாகிறது மூட்டுவலி கால்வலின்னு படற அவஸ்த நேக்கு தான் தெரியும்!!

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ள (30-Oct-19, 3:56 pm)
பார்வை : 147

மேலே