வயலும் வசந்தமும்

காற்றோடு நாத்தாட மனமும்
கூத்தாட/
சேத்து மேலே பாதங்களையும்
விட/
வசந்த உணர்வு நெஞ்சத்தில்
பட/
காப்பு அணிந்த கரங்களும் களையைத் தொட/

கிளுகிளுப்போடு ஏர் ஓட்டி பொன்னையா பாட/
பாட்டின் பொருளை நாட்டாமை
தேட/
பாட்டுக்குள்ளே ஏழையின் கதையும்
கூட/
சிந்தனையோடு பெண்களும் நாத்து
நட/

நகரும் கருமேகமும் நாத்தின் முகம் பார்த்திட/
அள்ளிய நீரை வெள்ளமாய்த்
தெளித்திட/
நெல்லு மணிகளை வேளாண்மை
பூத்திட/
பார்க்கும் கண் மணியெல்லாம்
வியர்ந்திட/

தொட்டு அறுக்கக் காலமும் நேரமும் பிறந்திட/
விளைச்சலைப் பார்த்து வியாபாரி
குவிந்திட/
விதைத்தவன் மனமோ மகிழ்ச்சியில் மிதந்திட/
ஆனந்தக் கண்ணீர் விழியோரம்
வந்திட/

பிறக்கும் பொங்கலோ இன்பம்
பொங்கிட/
துன்பம் மறந்து இல்லத்தார்
சிரித்திட/
வயலும் வசந்தமும் சுகந்தமாய்
மாறிட/
விவசாகியின் கரங்கள் கதிரவனை வணங்கிடும்/

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (4-Nov-19, 9:03 pm)
Tanglish : vayalum vasanthamum
பார்வை : 231

மேலே