விண்ணுலகத்து ஓவியமே

இலையாடும் கிளையைப் போலே எம் மனம் ஆடுதடி
இதயத்தினுள் புகுந்தவளே இதமாய் தருவாய் முத்தம்
இஞ்சியின் காரம் போல் கெஞ்சும் என்னை பார்க்காதே
நெஞ்சில் பெரும்பாரம் நஞ்சாய் சுழலுதடி

பூவாசம் போன்ற புன்னகை பூக்கும் பூவே
புதுவேகம் புகுந்ததடி என்னுள் உன்னைப் பார்த்தபின்னே
புயலாய் ஆடுதடி என் ஐம்புலன்களும்
பொட்டுக் கண்களால் சுட்டு விடுவதைப் போல் பார்க்காதே

கண்கள் துடிக்குதடி காணவே உன்னை
கருமேக நிறத்தவளே காதல் கொண்டு வந்திடடி
கையோடு கைச்சேர்த்து காணுவோம் புது உலகை
கார்த்திகை மாதக் குளிருக்கு சேர்த்து அணைத்தே கிடப்போம்

அங்குல அங்குலமாய் உன் அழகை இரசிக்கவே
வெண்கல மணிப்பூட்டிய வண்டியாய் வேகந்தோணுதடி
வெண்முல்லைச் சூடிய விண்ணுலகத்து ஓவியமே
விரைவில் என்னைச் சேர்ந்து பெருஞ் சொர்க்கம் காண்போம் வா…...
---- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (5-Nov-19, 7:25 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 55

மேலே