காதல் சொல்ல வந்தேன் -9

காதல் சொல்ல வந்தேன்-9

கண்ணுக்குள் நுழைந்து கதை
பேசியது

கன்னல் மொழியென் காதில்
ஒலித்தது

பின்னலிடை கண்ணில் மின்னல் அடித்தது

உன்னை பார்த்த விநாடியில்
இது நடந்தது

அத்தோடு எங்கே நின்றது

அதன்பின் தொடர்வது தொடர்ந்தது

சிறு சிறு போராட்டத்திற்க்கு பின்
உன் மனம்நெகிழ்ந்தது

எனக்குள்ளும் பெறும் மாற்றம்
நிகழ்ந்தது

அந்த மாற்றம் எனக்கு ரொம்ப
பிடித்தது

கட்டாயப்படுத்தாது உன்னால் அது
நடந்தது

காரணம் எனக்கு உன்னை ரொம்ப
பிடித்தது

எழுதியவர் : நா.சேகர் (5-Nov-19, 8:20 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 126

மேலே