பெண்மனசு யாருக்குப்புரியும்
-----------------------------------------
அறியும் வயதுமுதல் ஆரம்பிக்கும்
அலைகடலென தேங்கி நிற்கும் /
சுயநலம் துளியின்றித் தெளிந்திருக்கும்
சுற்றம் உற்றங்களை நினைத்திருக்கும் /
குடும்பத்தில் குதூகலம் நிலைத்திருக்க
குறையின்றி வாழ்ந்திடவும் வழிதேடும் /
பாவையவள் பார்வையில் பாசம்வடியும்
பாழ்மனசில் ஏக்கங்கள் நிறைந்திருக்கும் /
சுற்றியுள்ளோர் குறைபலக் கூறினாலும்
சுழல்காற்றாய் வேகமுடன் உழைத்திடும் /
ஆனாலும் பெண்மனசு யாருக்குப்புரியும்
ஆண்களுக்கு அடிமையெனவே பேசும் !
பழனி குமார்