பேரழகு

அவள் அழகி, செம்பொன் நிறத்தால் ,
அவள் அழகி . கயல் விழியால்,
அவள் அழகி, கார்க்குழலால்,
அவள் அழகி, மின்னல் இடையால்,
அவள் அழகி , கொவ்வை இதழலால் ,
அவள் அழகி , கொற்கை முத்து பல்லழகால் ,
அவள் அழகி, நகில்கள் கலசங்களால்,
எல்லாம் அவளில் அழகே , ஆயின் அவள்
இவற்றை எல்லாம் தாண்டி,
படிக மனத்தால் , நல்ல குணத்தால்,
பேரழகியாய் என் மனதைத் தொட்டாள்.

எழுதியவர் : வாசவன் -தமிழ்பித்தன் -வாசு (6-Nov-19, 9:30 pm)
பார்வை : 414

மேலே