நெஞ்சத்தில் ஹைக்கூ நூல்ஆசிரியர் கவிஞர் இரா இரவி நூல் விமர்சனம் செல்வி இர ஜெயப்பிரியங்கா நூல் வெளியீடு திருமதி இர ஜெயச்சித்ரா

நெஞ்சத்தில் ஹைக்கூ...

நூல்ஆசிரியர் : கவிஞர். இரா. இரவி.
நூல் விமர்சனம் : செல்வி. இர. ஜெயப்பிரியங்கா.
நூல் வெளியீடு : திருமதி. இர. ஜெயச்சித்ரா.
48, வடக்குமாசி வீதி, மதுரை-1.
******

கவிஞர் இரா. இரவி.அய்யா அவர்;கள் எனக்கு குரு. அவர் தினமலர் நாளிதழில் 2015-ல் எழுதிய ‘கவிதை எழுதுவோம்’ என்னும் கட்டுரையே முதன்முதலாக என்னைக் கவிதை எழுத ஊக்கப்-படுத்தியது. கவிதை உலகை எனக்கு அறிமுகம் செய்து வைத்தவர்; அய்யா அவர்;கள். கவிஞரின் ஆறாவது படைப்பு ‘நெஞ்சத்தில் ஹைகூ’என்பதாகும். 2005-ல் வெளிவந்த இந்நூலிற்கு அணிந்துரையை எழுத்தாளர்; வல்லிக்கண்ணன் வழங்கியுள்ளார்;. அதில் கவிஞர் இரா. இரவியின் அனுபவத்தையும் ஆற்றலையும் கவிதை இயற்றும் திறமையும் அவரது ஹைக்கூ கவிதைகள் எடுத்துக்காட்டுகின்றன என்கிறார்;. மேலும் வாழ்த்துரை வழங்கிய கவிஞா; மு.முருகேஷு; குறிப்பிடுகையில் தமிழ் ஹைக்கூ கவிஞாகளில் இன்றைய தனித்த அடையாளத்தோடு இருப்பவர்; கவிஞா;. இரா. இரவி. சமூக அவலத்தை சுருக்கென குறுங்கவிதையில் படம்பிடித்து காட்டும் வல்லவர்; என்கின்றார்;. இனி நூலுக்குள் நுழைவோம்.!

பெண்களுக்கு கல்வி தேவையான ஒன்று பெண் படித்தால் நாடும் வீடும் சிறக்கும் என்பதை நூல்.

‘அடுப்பூதும் பெண்களுக்கு
படிப்பெதற்கு செருப்பாலடி
சொல்பவனை!

உலகில் சாதி மத வேறுபாடு கூடாது சகோதர முக்கியத்துவம் கொடுத்து அனைவருடனும் சமமாக பழக வேண்டும்.

‘தாழ்த்தப்பட்டவன் விளைவித்த
பஞ்சில் உருவானது
அர்ச்சகா; பூணூல்’!

உயிர்களிடம் அன்பு வேண்டும் புலால் உண்ணக்கூடாது என்பதை நூல்,

‘தீபாவளிக்கு தப்பி
ரம்;ஜானுக்கு மாட்டியது
ஆடு;’!

என் நம்பிக்கை கைவிட்டாலும் தன்னம்பிக்கை கைவிடக்கூடாது என்பதை நூல்,

‘இழப்பவன் வீழ்வின்
இருப்பவன் வெல்வான்
தன்னம்பிக்கை’!

அரசியல்வாதிகளின் போலிநடிப்பு பற்றி நூல்,

‘உதட்டில் வெல்லம்
உள்ளத்தில் கள்ளம்
அரசியல் கூட்டணி;’!

காதல் கவியாக நூல்,

‘யார்; சொன்னது
மலர்; பேசாதென்று
பேசுகிறாள்; என்னவள்;’!

எந்த தொழில் செய்தாலும் அதில் வேறுபாடு இல்லை, ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்பதை நூல்.

‘அசுத்தம்
சோறு போடும்
துப்புரவு தொழிலாளி!’

‘நெஞ்சத்தில் ஹைகூ’பல்வேறு தலைப்புகளான தழிழுணர்;வு, முற்போக்குச் சிந்தனை, மனிதநேயம், விழுமியங்கள், குடும்ப உறவு, இயற்கை மீதான ஈடுபாடு, தன்னம்பிக்கை சிந்தனை, மெல்லிய நகைச்சுவை உணர்;வு என பன்முகப்பார்;வைக் கொண்ட நூல் இந்நூல். எதிர்காலத்தில் அய்யா அவர்களைப் போல் சிறந்த பல படைப்புக்களை படைப்பதே என் இலக்கு! நன்றி.


.

எழுதியவர் : கவிஞர். இரா. இரவி (7-Nov-19, 12:13 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 70

மேலே