தீ முதல் சொல் கவிதை தலைப்பு தீ மூட்டாதே

தீண்டாமை என்பது எதுவனக்
கூறும்/
தீயவையைக் குறிக்கும் என்றது
ஊரும்/

தீயவர் நெஞ்சில் விதையாகும்
பொறாமை /
தீயாக எரித்திடும் என்பவை
உண்மை/

தீர விசாரித்து வழங்கிடும்
தண்டனை/
தீயோர் திருந்திட திறக்கும்
பாதை/

தீ சுட்ட புண்ணுக்கு
மருந்துண்டு/
தீயாக வரும் சொல்லிலே
விசமுண்டு/

தீயேற்று இருளுக்கு ஒளி
கொடுத்திட/
தீ மூட்டாதே வாழ்க்கையைக்
கெடுத்திட/

தேர்வுக்கு நன்றிகள் 🌹🙏🙏

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (7-Nov-19, 7:18 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 119

மேலே