கவிதையின் நாயகி

போர் என்றால்
----விற்புருவம் வளைப்பாள்
புன்னகை என்றால்
----மெல்லிதழில் யாழ் மீட்டுவாள்
கார் என்றால்
----கருங்குழல் காற்றில் மிதக்கவிடுவாள்
தேர் என்றால்
------மெல்ல அசைந்து நடப்பாள்
காதல் என்றால்
-------நாணி மெல்ல நெளிவாள்
யார் நீ என்றால்
-----உன் கவிதையின் நாயகி என்பாள் !

எழுதியவர் : கவின் சாரலன் (9-Nov-19, 9:56 pm)
Tanglish : kavithaiyin naayaki
பார்வை : 328

மேலே