காதல் சொல்ல வந்தேன் -14
காதல் சொல்ல வந்தேன்-14
இருவரும் தனிமையில் சந்திக்கும் முதலனுபவம்
விரைத்த ஆண்மை விழித்தப்
பெண்மை
சூரியன்காண மலர்ந்த தாமரை
அதன்
அணைப்பில் புதுப் பொலிவுறுமே
ரசாயன மாறுதல் உடலுக்குள்ள மனதிற்குள்ளா
என் மடியில் உன் நம்பிக்கை
தலைதடவி உச்சிமுகரும் தாலாட்டில்
கண்மூடியது உறங்கவில்லை தடையில்லையென
கிணற்றுநீரை வெள்ளம் கொண்டு போகுமோ என்ற
சமாதானத்தில் நான் எல்லை மீறிய விளையாட்டின்றி
என் அணைப்பில் புதுப்பொலிவுடன் நீ
உன் நம்பிக்கையை வீணடிக்காது
காரணம்
உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்