உன் அழகு வழுக்குதே என் வார்த்தை மழுங்குதே

நதி கலங்காமல் இருக்குமா ?
என்றும் ஒன்றாய் தெரியும் உன்னைப் போல்
நீ அழகு நீரோட்டம் அல்ல ?
வண்ணப் பூமரம் உந்தன் மேனியா ? இல்லை
அகன்று நின்றால் தான் நீ மரம்
அருகில் வந்தால் நீ
மலர்த்தோட்டமாய்த் தெரிகிறாய்
உன் மொழியில் குயில் பேசும் என்றால்
அதுவும் முடியவில்லை
ஒவ்வொரு மொழிவிலும்
ஒவ்வொரு நாதம்
பிறக்கிறதே உன்குரலில்
வார்த்தைக்கு வசப்படாமல்
வழுக்கிச் செல்லும் அழகியே
உன்னை வர்ணிக்க முடியாமல்
நான் மழுங்கி கிடக்கிறேனடி !

அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (11-Nov-19, 12:15 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 435

மேலே