எச்சில் பட முத்தங்கொடு

மலர்கள் பூத்த வாசம்
இளம் மனதினை மயக்கியது
மன்மதன் விட்ட பாணம்
இளமையைத் துண்டியது

எங்கும் தூவும் பனியால்
என்னுடல் சூடாகியது
இளமானே உனைத்தேடி
எங்கெங்கும் ஓடியது

பனிக்கரடிப் போலே நான்
தனிமையில் தவிக்கின்றேன்
பரலோக பேரழகியே
பதமாக என்னைக் கட்டிக்கொள்

தெளிவான வானத்தில்
திரண்ட கருமேகம் போலே
திடிரென காதல் பூ
தேன் சொட்டப் பூத்ததடி

புதுவெள்ளம் கண்ட நதியாய்
குதுகலம் என் உள்ளத்திலே
எழில் நிறைந்த முகத்தாளே
எச்சில் பட முத்தங்கொடு.
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (12-Nov-19, 2:38 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 58

மேலே