சிரியாவில் குழந்தைகளின் நிலை
சிறுச்சி பேசிய சிறுவர்கள்
சிதைந்து போனார்கள்
சிறகு முளைத்த சிறுவர்கள்
இறந்து போனார்கள்
மண் தின்னும் வயது
என்பதால்தான் மண் தின்றதோ
தீங்கு நினைக்காத குழந்தைகள்
தீயில் கருகின
சிரிப்பொலியின் சத்தங்களை
ஆயுதங்கள் மூடின
பள்ளியறை குழந்தைகள் எல்லாம்
மண்ணறையில் உணவாகின
பூவில் சாக்கடை தெளித்து
சிலர் நறுமணம் நுகர்ந்ததுதான் வேதனை
வாடிய மலர்களை மலரவைக்க முடியாது
மலர்களே இல்லை நறுமணம் எங்கிருந்து வரும்
நினைத்து பார்த்தேன்
குழந்தைகள் தினம் கொண்டாட முடியவில்லை...
BY ABCK