மலரும் வண்டும்
தேன் மலராய் இருந்த என்னை
நாடி வந்தாய் வண்டே- வந்தாய்
மொய்த்தாய், மொய்த்து மதுவெல்லாம்
உறிஞ்சிவிட்டு என்னை வெறும்
மலராய் விட்டு வேறோர் மலர்
நாடி செல்கின்றாயே , இது உனக்கு
நியாயமா சொல் வண்டே என்றது
தேன் மலர்..... அதற்கு வந்து சொன்னது
' மலரே நான் என்ன செய்வேன்
என் மோகம் தீரவில்லையே அதனால்தான்
இன்னுமோர் மலர் நாடி போகின்றேன் நான்'.
என்றது !