சாலையோர மரங்கள்
நிழலில் வலைபின்னி
எனக்கு நிழற்குடை தருகிறாய்
நிமிடத்திற்கு ஒருமுறை தென்றல் கதைச்சொல்லி
உள்ளதை வருடுகிறாய்
மழையின் தூதவனே
மண்ணுயிரியின் காவலனே
பறவைக்கும் இடம் கொடுத்தாய்
வாடகை வாங்காமல் உன் வீட்டில்
எத்துணை கைகள் உனக்கு
பசுமையை தானம் செய்கிறாய்
நீ போராளிதான்
நெடுநாளாய் நின்று
பசுமைக்காக போராடுகிறாய்
இனி சாலையோர மரங்கள் எல்லாம்
சாகா வரம் பெற வேண்டும்...
BY ABCK