இறைவனாக மாறிய நாய்

நாய் ஒன்று வந்து
வாலாட்டிக் கொண்டு
என் வீட்டில் நின்று
நான் போட்டதைத் தின்று
செழிப்பாக வளர்ந்தது இன்று.

பாசத்தில் அதுவும்
முழுப் பலத்தினையும் காட்ட
பலவீனன் போலே அதன்
பாசத்தின் முன்னே நானும்
பம்மித் தான் போனேன்

யார் வந்த போதும் நீங்கள்
யாரு என்று கேட்கும்
பார் புகழும் குணத்தால் குரைத்து
பார்வையால் மிரட்டி கூர்மையான
பாதுகாப்பை கொடுத்தது எனக்கும்.

ஒவ்வொரு நாளும் கம்பீர
நடையால் இருப்பிடம் காக்க
காக்கை குருவி என்பன இன்றி
கடந்து செல்லும் ஆட்கள் எல்லாம்
கவனமாய் என் வீட்டை கடக்கலானர்

அன்னை அப்பன்
அவர்கள் பிள்ளையை விடவும்
நான் என் மனைவி
எங்கள் பிள்ளையை விடவும்
என்னை காக்கும் நாயே இறைவன்.
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (18-Nov-19, 8:57 am)
சேர்த்தது : நன்னாடன்
Tanglish : naye iraivan
பார்வை : 46

மேலே