மயில்சாமி அண்ணாதுரை
பொள்ளாச்சியில் கால்பதித்த
அறிவியல் ஆராய்ச்சியே
ஆய்வுகளின் மறுசுழற்சி நாயகனே
ஆராய்ச்சியில் சாதனை புரிந்த தமிழனே
நிலவின் பிறப்பை ஆராய்ந்து
நிலவில் நீருண்டு என்று
அறிவியலின் தாகம் தீர்த்தவரே
அறிவியல் கருவை சுமந்து
சந்திரயானை பெற்றடுத்த தகப்பனே
ஏவுகணை பறக்க
சிறகுகள் கொடுத்த
அறிவியல் தானமே
இளைய கலாமே
தமிழை நேசிக்கும் காதலனே
செவ்வாய்ப் பயணம் கட்டுரை எழுதும்
தமிழ்நாட்டின் திங்களே (நிலா)
அறிவியலும் ஆராய்ச்சியும்
உன்னை வெளிச்சமாக்கியது
உழைப்பால் உயர்ந்த ஏவுகணையை
அந்த அண்ணாதுரை முதல்வரானார்
இந்த அண்ணாதுரை அறிவியலில் முதல்வரானார்
BY ABCK