அவள் அழகு
பார்த்தேன் உன்னை ரசித்தேன் உன்னழகை
ரசித்தேன் உன்னழகை ஓர் கவிஞனாக வ்ரித்தேன் உன்னழகை அங்கம் அங்கமாய்
காதல் ததும்பும் அழகு தமிழ் சொற்களால்
இந்த கவிதையை உனக்கு பாடி காட்ட
உன்னருகே வந்தேன் நீ என்னைப் பார்த்து
புன்னகைத்தாய் உயிர்க்கொண்ட சிலைபோல்-என்
கவிதையே என்னைப் பார்த்து சிரிக்கின்றதோ
இவள் அழகிற்கு உன் கவிதை எம்மாத்திரம்
என்பதுபோல், கற்சிலையானேன் நான்
பேச முடியாது அவள் அழகின் தரிசனத்தில்