தந்தம் நிலைதவறாத் தானத்தில் பூச்சியமே - நீதி வெண்பா 28

நேரிசை வெண்பா

தலைமயிரும் கூருகிரும் வெண்பல்லும் தந்தம்
நிலையுடைய மானவரும் நிற்கும் - நிலைதவறாத்
தானத்தில் பூச்சியமே சாரும் நிலைதவறும்
தானத்தில் பூச்சியமோ தான். 28

- நீதி வெண்பா

பொருளுரை:

தலைமயிரும் கூர்மையான நகமும், வெண்மையாகிய பற்களும் தங்கள் தங்கள் நிலை தவறாத மானிகளும் நிற்க வேண்டிய நிலைமை தவறாத இடத்தில் பூசிக்கப்படுவனவே! பொருந்திய நிலைமை தவறுமிடத்திற் பூசிக்கப்படுவனவோ? (அல்ல)

கருத்து:

தத்தம் நிலையினின்று தவறுவோர் அவமதிக்கப்படுவர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-Nov-19, 10:12 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 83

சிறந்த கட்டுரைகள்

மேலே