தந்தம் நிலைதவறாத் தானத்தில் பூச்சியமே - நீதி வெண்பா 28
நேரிசை வெண்பா
தலைமயிரும் கூருகிரும் வெண்பல்லும் தந்தம்
நிலையுடைய மானவரும் நிற்கும் - நிலைதவறாத்
தானத்தில் பூச்சியமே சாரும் நிலைதவறும்
தானத்தில் பூச்சியமோ தான். 28
- நீதி வெண்பா
பொருளுரை:
தலைமயிரும் கூர்மையான நகமும், வெண்மையாகிய பற்களும் தங்கள் தங்கள் நிலை தவறாத மானிகளும் நிற்க வேண்டிய நிலைமை தவறாத இடத்தில் பூசிக்கப்படுவனவே! பொருந்திய நிலைமை தவறுமிடத்திற் பூசிக்கப்படுவனவோ? (அல்ல)
கருத்து:
தத்தம் நிலையினின்று தவறுவோர் அவமதிக்கப்படுவர்.