நினைவு நாள்
சேய்களுக்கு வரம் வேண்டி
தாய்மை தவமிருக்கும்...
அம்மா.. உந்தன்
நிழலென்னும் சொர்க்கத்தில்
வாழ்ந்திருந்த எனக்கு
இனிமேலும் வேண்டுமோ
இன்னொரு சொர்க்கம்...
அன்பைக் கற்றது அன்னையின்
அரவணைப்பில்...
அழுகையிலும் ஆனந்தம்
கொண்டது அன்னையின் அருகாமையில்...
உன்னை நினைக்காத
நாள் எதுவும் இல்லாததால்
இன்று மட்டுமல்ல
எல்லா நாளும் எனக்கு
உந்தன் நினைவு நாளே...
👍💐😃🙏👏🌺🌹