தெருவில் நிற்கும்

ஊர் மக்களெல்லாம்
ஒன்று கூடி இழுக்கும்
தேர்த்திருவிழா,
ஆண்டவனுக்கு முன்னால்
அனைவரும் சமமென
ஆர்ப்பரிக்கும் நந்நாள்

பகைமை மறந்து
ஈகை குணத்தோடு
இறைவனை அழைத்து செல்ல
ஒற்றுமையாய்
வடம் பிடிக்கும் கைகள்
வரலாறு படைக்கும்போது

சாதிக் கலவரமும்
சாதிக்க வந்ததுபோல்
சங்கு ஊத,
தீவிரவாதம் வழிகாட்டும்
சனங்கள் செத்து மடியும்
சாமி தெருவில் நிற்கும்

எழுதியவர் : கோ. கணபதி. (24-Nov-19, 9:18 am)
சேர்த்தது : கோ.கணபதி
Tanglish : theruvil nirkkum
பார்வை : 63

மேலே