வா கிளியே வா
கண்களில் மிதக்கிறாய்
கண்தூக்கம் கெடுக்கிறாய்
நினைவுகள் எங்கிலும்
நீயே தான் கிடக்கிறாய்
மறக்கத் தான் நினைக்கிறேன்
முயன்று நான் தோற்கிறேன்
நாடி நாடி வருகிறேன்
ஓடி ஓடி விலகுகிறாயே ஏன் ?
பாடித் திரியும் மைனாக்களே
என் தேடுதல் புரியவில்லையா ?
கூடிக் கழிக்கும் கிளிகளே
என் கோலம் தெரியவில்லையா ?
எவ்வாறு அவளைச் சேர்வேன்
ஓர் உபாயம் கூற மாட்டீரோ?
அஷ்றப் அலி