வலிகளின் நடுவே இன்பமாக வந்தாய் 555
உயிரானவளே...
காலங்கள்
ஓடிக்கொண்டு இருந்தாலும்...
சில பசுமையான நினைவுகள்
என்றும் மாறுவதில்லை...
என் வலிகளின் நடுவே
நீ வந்தாய் பேரின்பமாக...
இதுதான் வாழ்க்கை என்று
நான் உனரும் நேரம்...
நீயும் எனக்கு கொடுத்து
சென்றுவிட்டாய் வலிகளை...
உன் நினைவுகளோடு நான்
இருப்பதால் என்னவோ...
நானும் காதல் கிறுக்கன்
ஆகிவிட்டேன்...
தொலையாத நினைவுகளாய்
நம் காதல் நினைவுகள்...
என் உள்ளத்தில்
இன்றும் பசுமையாக.....