சில சிவஞான உண்மைகள் மற்றும் தத்துவங்கள் --1
சில சிவஞான தத்துவங்கள் மற்றும் உண்மைகள் இதோ உங்களுக்காக ..
இறைவனுக்கும் நமக்கும் உள்ள உறவு :
நாச மார்க்கம் --- இறைவனை முதலாளியாக எண்ணி சேவை செய்தல்
சத்புத்ர மார்க்கம் -- இறைவனை தாய் தந்தையாக எண்ணுதல் .
சக மார்க்கம் --இறைவனை நண்பனாக எண்ணுதல்
சன் மார்க்கம் -- இறைவனை குருவாக எண்ணுதல்
முக்திநிலைகள் நான்கு :
சாலோகம் -- சிவலோகம் சென்று சிவ தொண்டு செய்தல்
சாமீபம் -- சிவனுக்கு அருகே இருந்து அணுக்க தொண்டு செய்தல்
சாருபம் -- சிவனுக்கு பயன்படும் உருவமாகி தொண்டு புரிதல்
சாயுச்சியம் --இறைவனோடு இரண்டற கலந்து இன்பத்தை அனுபவித்தல்
சைவ நெறிகள் (படி நிலைகள் ) நான்கு :
சரியை : இறைவன் உருவ திருமேனிகளை புறத்தே வணங்கி சிவாலயத்திற்கும் சிவ னடியார்க்கும் தொண்டு செய்தல்
முக்தி -- சாலோகம்
கிரியை : இறைவனது அருவுருவத் திருமேனியை அகத்தும் புறத்தும் பூசித்தல்.
முக்தி : சாமிபம்
யோகம் : சிவனை அகத்தே பூசித்தல்
முக்தி -- சாரூபம்
ஞானம் : முப்பொருள் உண்மையை அறிவிக்கும் ஞான நூல்களை கேட்டு சிந்தித்து தெளிந்து நிட்டை கூடுதல்
முக்தி -- சாயுச்சியம்
நம்முடல் எதற்க்காக நமக்கு கொடுக்கப் பட்டுள்ளது ..
தலை -- சிவனை வணங்க
கண் --நமக்காக நஞ்சுண்டவரை பார்க்க
செவி -- சிவனின் பண்புகளையும் செயல்களையும் கேட்க
மூக்கு --முக்கண்ணனை போற்றி ஒலிக்க
வாய் -- சிவபெருமானை எப்போதும் வாழ்த்த
நெஞ்சு -- செஞ்சடையானை எப்போதும் நினைக்க
கால்கள் --அரன் கோவிலை வளம் வர
கைகள் -- இறைவனை வணங்கி தொழ
ஆக்கை --கோவிலில் வலம் வந்து பூக்களை சமர்ப்பிக்க
விளக்க விளக்க இன்னும் விளக்கம் வரும் .