உன்னை நோக்கி

உன்னை நோக்கி

============================================ருத்ரா


காதலிக்கிறேன்

என்று சொல்லிவிடலாம்

உன்னிடம்.

ஆனால்

அந்த சிலம்பு உடைந்து

முத்து தெறிக்குமா?

ரத்தினம் தெறிக்குமா?

என்னும் எதிர்பார்ப்பை விட‌

என் மனம் உடைந்து சிதறுமோ

என்பதே என் அச்சம்.

எதிர்மறையாய் நீ ஏதாவது

சொல்லிவிட்டால்?

அதற்காக

பெண்ணாகிய நான்

தினம் தினம்

புன்னகையை

ஒவ்வொரு முத்தாய்

உன்னை நோக்கி

உதிர்க்கின்றேன்.

முத்துக்கள் இன்றி

கடல் வற்றினாலும்

தொடர்ந்து கொண்டிருப்பேன்

புன்னகையை.

ஏனெனில் இந்த புன்னகை

என்பது

வற்றாத ஊமை அழுகையின்

கடல் அல்லவா!



==================================================

எழுதியவர் : ருத்ரா இ பரமசிவன். (3-Dec-19, 6:03 am)
சேர்த்தது : ருத்ரா
Tanglish : unnai nokki
பார்வை : 372

மேலே