மழையே
காய்ந்து கிடக்கும் ஊரை நனைக்க
வருவாயா என கேட்டேன்
நீ நனைவதென்றால் வருகிறேன் என்றாய்
சரி அப்படியாவது குளிரட்டும் பூமி
என சம்மதித்தேன்
உற்சாகமாய் என்னை நனைத்தாய்
போதும் என்று
நான் வந்து விட்டேன் நான் வந்தது
தெரியாது
இன்னும் நனைக்கின்றாய் காய்ந்து
கெடுத்தது
போதும் இயற்கை மழையே நீ
பெய்து கெடுக்காதே