இதென் கற்பனை உலகம்

வான்தனை வளைத்து
தேன் மெல்ல தெளித்து வளர்த்த
வண்ணமிகு தோட்டமிது
எண்ணமெல்லாம் என்னுடையது
நானே ராஜா நானே மந்திரி
இட்டதே சட்டம்
இதில் தேவையில்லை தர்க்கம்
எல்லாம் எனக்கு எளிது
எடுத்து உரைப்பதற்கு அரிது
கனவுகள் என்று ஏதுமில்லை இங்கு
காலங்கள் என்னும் கட்டுக்குளில்லை
காற்றுக்கும் இங்கு வேலையில்லை
கற்றுக் கொடுப்பதற்கு ஒன்றுமில்லை
காரணம் இதென் கற்பனை உலகம் ....

- செல்வா

எழுதியவர் : செல்வா (3-Dec-19, 10:07 am)
சேர்த்தது : செல்வா
பார்வை : 395

மேலே