நிமிர்ந்து வா
நீ எழுதாத தீர்ப்பை
எழுத தொடங்கிவிட்டாய்
பொய்மையை தட்டி எழுப்பு
உண்மை விழிக்கட்டும்
உனக்கென ஒருவழி நீ தேடு
கடலும் வழிவிடும் நீ ஓடு
நீந்திதான் பார்ப்போம்
ஈரத்தோடு வீரமும் கரை தொடட்டும்
நிமிர்ந்து வா
பறந்து போவோம்
நம்மைக்கண்டு பருந்து கூட
பயந்து போகும்
வானம் தூரமில்லை
வானவில்தான் நாம் தேடும் எல்லை
கையால் தொட்டு பார்த்து
வெற்றி சாயம் பூசிடலாம்
மறந்தும் தலை குனியாதே
நிமிர்ந்தால்தான் வானம் தெரியும்...
BY ABCK