பரிசு

உழவுக்கு உழுதுவைக்க மாட்டோடு மாடாய் உழைக்கும்

உடல் நனைக்கும் வியர்வையெல்லாம்
பூமியில் கலக்கும்

வியர்வையை குடித்தப்பின்னேதான்
பூமியும் செழிக்கும்

அந்த உழைப்பை வாங்குவதெல்லாம்
செல்வத்தில் கொழிக்கும்

உழைப்பை கொடுத்ததுக்கோ ஒருவாய்
கஞ்சிதான் நிலைக்கும்

எழுதியவர் : நா.சேகர் (5-Dec-19, 11:52 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : parisu
பார்வை : 1640

மேலே