பரிசு
உழவுக்கு உழுதுவைக்க மாட்டோடு மாடாய் உழைக்கும்
உடல் நனைக்கும் வியர்வையெல்லாம்
பூமியில் கலக்கும்
வியர்வையை குடித்தப்பின்னேதான்
பூமியும் செழிக்கும்
அந்த உழைப்பை வாங்குவதெல்லாம்
செல்வத்தில் கொழிக்கும்
உழைப்பை கொடுத்ததுக்கோ ஒருவாய்
கஞ்சிதான் நிலைக்கும்