மரங்களின் கிசுகிசுப்பு
மரங்களின் கிசு கிசுப்பு
அந்த அழகிய
குளத்தில் !
சுற்றி வர
கரையோரம் நின்ற
மரங்கள்
தங்களுக்குள் கிசுகிசுத்தன.
ஒரு புறம் !
தண்ணீரில் தெரியும்
பிரதிபலிப்பில்
யார் அழகு என்று
கனிகளாய் தொங்கும்
நான் அழகா?
பூக்களாய் நிறைந்திருக்கும்
நான் அழகா?
பூ, காய்,கனி
மூன்றும் இருக்கும்
நான் அழகா?
மறு புறம் !
இவள் மட்டும்
ஏராளமாய் பூத்திருக்கிறாள் ?
முணு முணுப்பில்
ஒரு மரம் !
அவள் எப்பொழுதும்
தண்ணீரில் கிளைகளை
தொட்டு சரசமிடுகிறாள்
அவனும் ஒட்டி உறவாடி
அவளுக்கு அள்ளி தருகிறான்
பதில் சொன்னது
மற்றொரு மரம்
இவைகளுக்கு இடையே
வயதால் உதிர்ந்த மரம்
தானும் அவனோடு
தொட்டு உரசிய நினைவுகளின்
சோகத்தில் மெளனமாய்
நின்றது