முதல் குற்றவாளிகள்

முதல் குற்றவாளிகள்.

அன்று:-

மூவேந்தர் ஆண்ட நாடு
செல்வம் கொழித்த நாடு
நீர் நிலைகள் நிறைந்த நாடு
மகிழ்ச்சி பொங்கிய நாடு
சங்கம் வைத்து முத்தமிழ் வளர்த்த நாடு
காதல், வீரம், கருனை கொண்ட மாபெரும் நாடு.

இன்று:-

ஆற்று மணலை அடியோடு அள்ளி கொள்ளை அடித்து
ஏறிகளை அழித்து அடுக்கு மாடி கட்டி
விவசாய விளை நிலங்களில் தொழிற்சாலைகளை நிறப்பி
நிலத்தடி நீரை முற்றிலும் உருஞ்சி விட்டு
லாரி தண்ணீர்க்காக
பிளாஸ்டிக் குடங்களை வரிசையாக நடுதெருவில் நிறுத்தி தண்ணீர்க்காக
வழி மேல் விழி வைத்து ஏங்கும் இன்றைய தலைமுறை.

பகட்டு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு
உண்மையை முற்றிலும் மறந்து
போலிகளுக்கு அடிமைப்பட்டு
இயன்றவரை இயற்கையை அழித்து அட்டகாசம் செய்யும் இந்த தலைமுறை எதிர்கால தலைமுறையின் முதல் குற்றவாளிகள்.

- பாலு.

எழுதியவர் : பாலு (7-Dec-19, 7:53 pm)
சேர்த்தது : balu
Tanglish : muthal kutravalikal
பார்வை : 126

மேலே